search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக் போராட்டக்காரர்கள்"

    ஈராக் நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால் பஸ்ரா நகரில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Basracurfew #Basraprotests
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், ஊழல் மலிந்து விட்டதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்றாம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

    தொர்ந்து ஆறுநாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பலர் உயிர் இழந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ரா நகரில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அரசு செய்தி சேனல் நிறுவனத்துக்கும் தீவைக்கப்பட்டது.

    அதுமட்டும் இன்றி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புபடை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.


    இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் இன்று மாலை 4 மணியில் இருந்து பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், இதை பொருட்படுத்தாத பஸ்ரா நகர மக்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Basracurfew #Basraprotests
    ×